• Breaking News

    மாதவிடாய்.... மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்.... அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில்

     


    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார்.

    அப்போது வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு வெளியே அமர வைத்து அந்த மாணவியை தேர்வு எழுத வைத்தனர். இதனை அந்த மாணவியின் தாய் செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தவறு நடந்து இருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார்.

    No comments