• Breaking News

    நாகை: தலைஞாயிறு மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி நடைபெற்றது


     நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மாதிரி  வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் பயிற்சி நிறைவு பெற்றது.தொடர்ந்து மூன்றாம் கட்ட பயிற்சி நான்கு நாள் 15.04.2025 முதல் 18.04.25 வரை நீர் மூளை ஊராட்சியில் கிராம சேவை மையம் அலுவலகத்தில் நடைப்பெற்றது இரண்டு நாட்கள் (19.04.25 முதல் 21.04.25 வரை இரண்டு ஊராட்சிகள் உம்பளச்சேரி மற்றும் வாட்டாக்குடி களப்பயணம் மேற்கொள்ளப்படும்.

    இதில் வட்டார இயக்க மேலாளர் பிரேமா வரவேற்று பேசினார் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் சந்திரசேகரன் சண்முகவடிவு மற்றும்  ராஜ்குமார் அவர்கள் பயிற்சியை பார்வையிட்டார் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவா  முன்னிலையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் பயிற்சிகள் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார் இதில் சுயஉதவிக் குழு, SHG ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு PLF மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு BLF நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது.  கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , BLF, PLF மறுசீரமைப்பு  தேர்வு செய்யும் முறை நேரடியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

     பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு மற்றும் பொறுப்புகள் கொண்டு இந்த ஆண்டு  உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றி BLF, PLF EC உறுப்பினர்களுக்கு மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் அல்லது சமுதாய வள பயிற்றுநர்களுக்கு பயிற்சி நான்கு நாட்கள் வழங்கப்பட்டது. முடிவில் உம்பளச்சேரி சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர் ராசாத்தி நன்றி கூறினார்.



    நாகை மாவட்ட செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி

    No comments