• Breaking News

    கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.... ரைட்டர் கைது

     


    கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் ஆக இருப்பவர் ரமேஷ். இவர் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் புகார் தாரர்களிடமும், பாஸ்போர்ட் விபரங்களை சரிபார்க்கவும் லஞ்சம் பெற்று வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரைட்டர் ரமேஷ் லஞ்ச பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒழித்து வைத்துள்ளாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    மேலும், அவரை கைது செய்தும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போலீஸ் ஸ்டேஷனிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    No comments