நாகை: எள் விதையில் விதை நேர்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜாண்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோர் சிக்கல் ஊராட்சியில் விவசாயிகளுக்கு டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சைக்கொல்லியை பயன்படுத்தி எள் விதையில் விதை நேர்த்தி செய்யும் முறையை செயல் திறன் விளக்கமாக செய்து காண்பித்தனர்.
அதனை தொடர்ந்து மாணவிகள் அதன் பயன்கள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments