• Breaking News

    பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இவன் தான்

     


    பஹல்காம் தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் தான் மூளையாக செயல்பட்டான் என்று தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர் தான் ஆதில் அகமது தோகர். பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகளாக வசித்த இவன், 2018ல் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளான்.

    தற்போது பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் என்று தெரியவந்துள்ளது. இவன் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன்.

    * 2018ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவன் பாகிஸ்தானுக்கு சென்றான்.

    * பாகிஸ்தானில் மாயமான ஆதில் அகமது தோகர் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டான்.

    * 2024ம் ஆண்டு இவன் இந்தியாவுக்கு ஊடுருவி வந்துள்ளான்.

    No comments