• Breaking News

    குடும்ப பிரச்சனை..... ஹேர்டையை குடித்து மனைவி தற்கொலை..... விசாரணைக்கு பயந்து சேலையில் தூக்கிட்டு கணவன் தற்கொலை

     


    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. 

    இதில் நந்தகுமார் திருமணத்திற்கு பிறகு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கீதா தன் கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் அவர் தன் மனைவியை அங்கு சென்று அடிக்கடி பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமூக ரங்கபுரத்திலேயே நந்தகுமார் வேலை செய்து அந்த பகுதியில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா வேதனையில் வீட்டில் இருந்து ஹேர்டையை குடித்துவிட்டார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மனைவியின் உறவினர்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று அச்சத்திலும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்ல வேண்டும் என்ற பயத்திலும் தன்னுடைய மனைவியின் சேலையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments