• Breaking News

    நாகை: கீழையூர் அருகே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் ரத ஊர்வலம் நடைப்பெற்றது


    சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள சீராவட்டம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிறந்தநாள் ரத  ஊர்வல நிகழ்ச்சி சட்ட மன்ற  தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் பாமரன் பகவத்சிங் தலைமையில் நடைப்பெற்றது.


    மாநில செயலாளர் தமிழ்பாண்டியன் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் அவர்கள் முன்னிலையில் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் வேலு.குபேந்திரன்  கட்சி கொடியினை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்   ரத ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பின்னர்  கீழையூர் கடைத்தெரு வரை 4 கி.மீ தூரம்   மேளதாளங்கள் முழங்க  ஏராளமான விசிகவினர் வீர முழக்கமிட்டு  சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில்  மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மாவட்ட துணை செயலாளர் அரா.பேரறிவாளன், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரகுமார், நாகூர் முருகன், அனந்தகிருஷ்ணன், வேதை தொகுதி செயலாளர் சீம.இளையராஜா, பேரூர் செயலாளர் மாரி ஜீவா, விடுதலை வீரமணி உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த. கண்ணன் 

    No comments