• Breaking News

    கும்மிடிப்பூண்டி : 10 ஊராட்சிகள் அடங்கிய அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு பணி நடைபெற்றது..... முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்பு.....

     


    திருவள்ளூர் அதிமுக.வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்  பெரியபுலியூர் தண்டலசேரி ஆத்துப்பாக்கம் பண்பாக்கம் ரெட்டம்பேடு உள்பட 10 மேற்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி கள ஆய்வு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி திருவள்ளூர் அதிமுகவடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கழக செய்தி தொடர்பாளர் ஆன பொன்னையன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், கும்மிடிப்பூண்டி பேருர் செயலாளர்  ரவி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம் மனோஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முல்லைவேந்தன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் இமாச்சலம், நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, கருணாகரன், ஆனந்தராஜ், பார்வேந்தன்,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜா,ஆத்துப்பாக்கம் கிளை கழக நிர்வாகிகள் தீனதயாளன், மருது, உமாபதி, சுதாகர், குமார், பாரதி, பிரகாஷ், காசி, ஆறுமுகம், ராஜவேல், சுந்தர், செல்வம், சாம்குமார், மகேஷ், செல்வம், பெருமாள், ராஜேந்திரன், ராமலிங்கம், வாசு, ஆறுமுகம், மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய பாசறை நிர்வாகிகள் போத் கமிட்டி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



    No comments