• Breaking News

    தர்மபுரி: வனப்பகுதியில் யானை வேட்டை..... கோட்டை விட்ட வனத்துறையினர் இருவர் சஸ்பெண்ட்

     


    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1ல்,யானை மர்மமான முறையில் இறந்துள்ளதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறையினர் யானை முகம் சிதைக்கப்பட்டு, தும்பிக்கை தனியாக கிடந்ததை உறுதி செய்தனர்.அடையாளம் தெரியாதவாறு யானை தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் ஆண் யானை தந்தத்திற்காக கொன்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சம்பவத்தை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டுள்ளார்.

    யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு யானையை கொன்றவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    No comments