• Breaking News

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் மோதல்

     


    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்தியூர் நிர்வாகிகளை எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது.

    அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியாக கூறப்படுகிறது. இதனிடையே, புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    No comments