• Breaking News

    சட்டப்பேரவையில் செங்கோட்டையனுக்காக எடப்பாடி பழனிச்சாமி வைத்த கோரிகையை நிராகரித்த சபாநாயகர் அப்பாவு

     


    சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் நான்காவது நாள் அமர்வு தொடங்கியது. இந்த நிலையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எப்போதும் போல அவரே அவையை வழி நடத்துகிறார்.

    பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விவாதத்தில் செங்கோட்டையனை முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற ரீதியில் பேச அனுமதிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். செங்கோட்டையனுக்காக எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    No comments