என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான இஸ்லாமியர் பொதுமக்கள்..... நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்
சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் இன்று நடைபெற்று வரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வருகை தந்தார். இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து அவர் வந்துள்ளார்.அவரை காண ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் ராயப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விஜயுடன் நோன்பு திறக்க 2000-க்கும் அதிகமான இஸ்லாமியர்களும் குவிந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தார்.
அதன் பின் பேசிய அவர் கூறியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமியர் பொதுமக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப் பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும், என் அன்பான அழைப்பை ஏற்று இங்கே வந்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் கலந்து கொண்டது மிக்க மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments