அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனால், எட்டு நாட்களுக்கான பயணம் நீடித்தது. தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்கு, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் முன்வந்தது.நேற்று (மார்ச் 15) புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் அதிகாலை 4:33 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் நுழைந்தது. விரைவில் 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
பால்கன்-9 ராக்கெட் விண்வெளி மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. ராக்கெட்டில் வீரர்களை மீட்க சென்ற 4 பேரை கண்டதும் சுனிதா வில்லியம்ஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தார்.
0 Comments