• Breaking News

    செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட செயலாளருக்கு தாம்பரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாக வரவேற்பு


    சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் நேற்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்  பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  செங்கல்பட்டு  வடமேற்கு மாவட்ட செயலாளராக D. கில்லி சரத் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த வே கா வினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வடமேற்கு மாவட்ட செயலாளராக பதவி பெற்ற கில்லி சரத் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட த வெ கவினர் திரண்டனர் இதனால் தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில்  கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில்  சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் இருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக வெற்றி கழகத்தினர் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    No comments