• Breaking News

    குடிக்கு அடிமையான மகனை கொன்று மார்பு, வயிற்றை கிழித்து கற்களை சொருகி வைத்த தாய்

     


    ஈரோடு மாவட்டம் கதவணை நீர்நிலையம் அருகே ஜல்லி கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்களை சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்ட நபர் பவானி தொட்டிபாளையத்தைச் சேர்ந்த மதியழகன்.

     இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் போதைக்கு அடிமையான மதியழகன் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதால் கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மனைவி இறந்த பிறகு மதியழகன் தனது தாய் சுதா, தம்பி முருகானந்தம் ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி போதையில் தகராறு செய்த மதியழகனை சுதா, முருகானந்தம், அவரது நண்பர் கௌரி சங்கர், கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் இணைந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

    அதன் பிறகு அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். ஆற்றில் வீசினால் அவர் உடல் தண்ணீரில் மிதக்காத வண்ணம் வயிற்றை கிழித்தும், மார்பை பிளந்தும் கற்களை வைத்து கட்டியுள்ளனர். அதன் பிறகு காவேரி ஆற்றில் ஜல்லிகல்மேடு பகுதியில் வீசிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று ஒன்றுமே தெரியாதது போல நாடகமாடியது தெரியவந்தது. இதனால் சுதா, முருகானந்தம் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments