• Breaking News

    கரூர்: கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவிகள்..... தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்

     


    கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 

    பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானது. 

    இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் எம்.எஸ். சுகானந்தம் விளக்கம் கேட்ட போது தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலரை நேரில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அலுவலர் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    No comments