• Breaking News

    செம்பாக்கத்தில் சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி உள்ள செம்பாகம் ஏரியை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று செம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழு சார்பில் இன்று செம்பாக்கம் ஸ்ரீ சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் காலை 7 மணி அளவில் சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் எம்.ரவி தலைமையில் நடைப்பயணத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர் சங்கத்தின் தலைவர் எஸ் மோகன், சரஸ்வதி காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் காரை எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர் இதில் 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், 38வது மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரவீரன், 44வது மாமன்ற உறுப்பினர் ராஜா,  தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நல சங்கங்கள், செம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக செம்பாக்கம் ஏரி மற்றும் அதனை  சுற்றியுள்ள  குடியிருப்பு பகுதி வழியாக மேளதாளம் முழுக்கத்துடன்  ஏரிகளை பாதுகாப்போம் ஏரிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவோம், போன்ற வாசகம் அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு  கோஷங்கள்  எழுப்பியவாறு பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    இதில் சமூக ஆர்வலர் கலந்துகொண்டு ஏரிகளை எப்படி பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments