• Breaking News

    கும்மிடிப்பூண்டி அருகே அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசா பெருமாள் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குத்தானமேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது நூறாண்டுகள் பழமையான திருத்தளத்தில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதனைத் தொடர்ந்து கோ பூஜை  கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் கோ பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து மகா தீபாரதம் நடைபெற்றது.

     அதனைத் தொடர்ந்து இறுதி நாளான நேற்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பட்டாசியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

     அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு  சாமி தரிசனம் செய்தனர்   இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்  பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார், முன்னாள் கும்மிடிப்பூண்டி சேர்மன் கே.எம்.எஸ் சிவக்குமார்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி பண்பாக்கம் முன்னாள் தலைவர் சீனிவாசன் முன்னாள் தண்டலச்சேரி தலைவர் டி.ஆனந்த்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments