• Breaking News

    திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பஸ்சை கல்லை போட்டு நிறுத்திய நடத்துனர்



    திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வீரசின்னம்பட்டிக்கு பயணிகளுடன் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. புறப்பட்ட அந்த பஸ் மதுரை பஸ்கள் வெளியேறும் வாசலுக்கு வந்தபோது திடீரென கார் ஒன்று வர டிரைவர் பிரேக்கை அழுத்தினார். 

    பிரேக் பிடிக்காமல் பஸ் சென்று கொண்டே இருந்தது. சுதாரித்த டிரைவர் பஸ்சின் வேகத்தை குறைத்தார். உடனே கண்டக்டர் பஸ்சை விட்டு இறங்கி சாலை ஓரத்தில் கிடந்த கற்களை டயருக்கு முன் போட்டார். அதன் பின்னரே பஸ் நின்றது. இதையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சிறிது நேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ் பிரேக்கை சரி செய்தனர்.

    No comments