டாஸ்மாக் ஊழல் வழக்கு.... விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகுவதாக அறிவித்தனர். வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
No comments