விடுதியில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி.... மது அருந்தியது காரணமா..?
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி படூரில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அஸ்வினி தான் தங்கியிருந்த விடுதியில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் வார்டனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கல்லூரி மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அஸ்வினி அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தான் இறப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments