திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து 3 ஊழியர்கள் காயம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு திருநகரில் 110 கிலோ வாட் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர்கள் பாலச்சந்தர் உள்ளிட்ட 3 பேர் சோதனை செய்து கொண்டு இருந்தபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பற்றியது.
அதில் இருந்து ஆயில் சிதறி 3 ஊழியர்களும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
No comments