தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
No comments