தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டது. கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி கைது செய்யும் நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments