• Breaking News

    தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து

     


    தென்காசி - செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56719 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயில் *தென்காசி - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56738 செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரெயில் தென்காசி - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டைமதுரை பயணிகள் ரெயில் செங்கோட்டை - தென்காசி இடையே ரத்துசெய்யப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரெயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்

    இந்தத் தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    No comments