சிவகங்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புல்லட் பேரணி.... 170 பேர் மீது வழக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் அவரைத் தாக்கினர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ‘சமத்துவ புல்லட் பேரணி’ மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது.
இந்த பேரணி ராஜா முத்தையா மன்றத்திலிருந்து காந்தி நினைவு அருங்காட்சியம் வரை நடைபெற்றது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்ததால் காவல்துறையினர் பெண்கள் உட்பட 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments