கீழையூர் அருகே பெரியத்தும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது
கீழையூர் அருகே பெரியத்தும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பட்டதாரி ஆசிரியர் கே.செங்குட்டுவன் தலைமை வகித்தார்.முன்னாள் ஊராட்சி தலைவர் பி.எம்.உத்திராபதி,பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் தி.தமிழ்மாறன்,பள்ளி மேலாண்மை குழு தலைவி த.சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவிஞர் தி.வேதரெத்தினம் திருவள்ளுவர் சிந்தனை களம், என்ற அமைப்பை நிறுவி திருக்குறள் பலகை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் க.இரவிச்சந்திரன், கவிஞரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான சுதாஅருணகிரி, பேச்சாளர் இரா. பிரித்தி ஆகியோர் பங்கேற்று வள்ளுவம் காப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முன்னதாக பட்டதாரி ஆசிரியர் டி. செல்வ சிகாமணி வரவேற்றார்.இறுதியாக பட்டதாரி ஆசிரியை பா. பாரதி நன்றி கூறினார்.
No comments