• Breaking News

    சோழவரம் அருகே அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத  ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் ஆலய திருப்பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

     கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கிய இவ்விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கும்ப அலங்காரம், கரிகால பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கும், அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத  ஸ்ரீ வேணுகோபால் சுவாமி மற்றும் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments