• Breaking News

    பொன்னேரி: உலக ஓட்டுனர் தினத்தை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்


    உலக ஓட்டுநர் தினம் பிப்ரவரி9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சாலைப் போக்குவரத்தில் பணிபுரிபவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொன்னேரி பணிமனையில் ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது.

     இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறணியம் பலராமன் கலந்து கொண்டு பணிமனையில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அரசு பேருந்து ஓட்டுநர் சால்வை அணிவித்து இணைப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    அப்போது அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் .

    No comments