காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.... மம்தா முடிவு
மேற்கு வங்காளத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டுவிடும் என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, டெல்லியில் ஆம் ஆத்மிக்கு, காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி உதவவில்லை.
இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.ஆனால் இங்கு காங்கிரஸ் இல்லை, நான் தனித்தே போட்டியிடுவேன், நான் மட்டும் போதும் என்று கூறினார். அதோடு மாநிலத்தில் 3ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தேசிய அளவில் பாஜக-வை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும் என்று கூறினார்.
No comments