பல வகையான சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் சீட்டிங் செய்த இருவர் கைது
சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் மகாலட்சுமி(35) என்பவர் வசித்து வருகிறார். அதேபோன்று வீராத்தம்மன் கோயில் தெருவில் அசோக் குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, தீபாவளி சீட்டு, மகளிர் சுய உதவிக் குழுவும் நடத்தி வந்துள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சீட்டுக்கட்டி வந்துள்ளனர். ஆனால் சீட்டு முடிந்த பிறகு அவர்கள் சரியாக பணத்தை கொடுக்கவில்லை.
மேலும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவர்கள் பணத்தையும் வங்கியில் கட்டவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது தெரிய வந்தது.
அதோடு ஷகீலா, சுமதி சக்திவேல், ராஜாத்தி, சத்தியா, ஷாலினி, காமேஷ், கன்னியாகுமரி சண்முகம், பரமேஸ்வரி என 9 நபர்கள் ரூ.75, 33,500 ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து மகாலட்சுமி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments