இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் நியமன தலைவர் சுப்பிரமணி, அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர்கள் சண்முகவேல், வீரக்குமார், நிர்மலா மலைச்சாமி தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் பாலாஜி மற்றும் 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆனந்த், கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments