• Breaking News

    கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த ரோட்டரி மாவட்டம் 3232க்கு பிரசாந்த் மருத்துவமனை சார்பில் ரூ.1.80 லட்சம் நன்கொடை


    கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் இடையே உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாந்த் மருத்துவமனைகள் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்த ஆண்டு கார்ப்பரேட் ஊழியர்கள் இடையே இதயம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியின் 3வது பதிப்பின் இறுதிப் போட்டி பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 


    கும்மிடிப்பூண்டி ரோட்டரி கிளப், எஸ்2எஸ் எச்ஆர் மன்றம் மற்றும் ஐசிஎம்ஏ சிப்காட் ஆகியவற்றுடன் இணைந்து பிரசாந்த் மருத்துவமனை நடத்திய இந்த இறுதிப் போட்டியில் டிஜேஎஸ் குழும நிறுவனங்களின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, குழும தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன், டிஜெஎஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கிரிக்கெட் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட ரூ.1.8 லட்சம் நிதியை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரோட்டரி மாவட்டம் 3232க்கு நன்கொடையாக பிரசாந்த் மருத்துவமனை வழங்கியது.

    சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், இம்மருத்துவமனை மேற்கொண்டு வரும் 'சேவ் யங் ஹார்ட்ஸ்' என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள 36 கார்ப்பரேட் நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில் வெஸ்டர்ன் தாம்சன் குழு (Western Thomson Groups) அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்துடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும், மிச்செலின் இந்தியா பிரைவேட் லிமிடெட், தேர்வாய் கண்டிகை அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வென்றது.

    No comments