சென்னை - திருச்சி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 3 தனியார் சொகுசு பேருந்துகள்..... 35 பேர் காயம்
கடலூர் மாவட்டம்,வேப்பூர் அருகே உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் 3 தனியார் சொகுசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுள்ளன.
அப்போது முன்னாள் சென்ற பேருந்து திடீரென பிரேக் பிடித்ததில், அவற்றின் பின்னே வந்த இரு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேருந்துகளிலும் பயணித்த 35 பயணிகள் படுகாயமடைந்தனர்.
No comments