முன்னாள் படை வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெறலாம்..... மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து பணி காலம் நிறைவு பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின்போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள், மணமாகாத, கணவனை இழந்த மற்றும் கணவனைப் பிரிந்த முன்னாள் படைவீரர்களின் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.
இத்திட்டத்திற்கான வழிமுறைகள்:-
1 வயது முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்சம் 55.
2 முன்னாள் படைவீரரின் தகுதியுள்ள மகன்கள், மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை மகள்கள் பிரிந்த மற்றும் முன்னாள் கைம்பெண்களுக்கு குறைந்தபட்சம் 21 அதிகபட்சம் 55 வயது. படைவீரர்களின்
3. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
இதற்கென குறைந்தபட்ச படிப்பு ஏதுமில்லை.
5. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான வரம்பு ஏதும் இல்லை.
6. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஏற்கனவே மத்திய அரசு மாநில அரசுகளால் வழங்கப்படும் இதைப்போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக்கூடாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொலைபேசி (எண்.04365-299765) மூலமாக தொடர்பு கொண்டு பயனடையலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு ஏ.பி.மகாபாரதி, இ.ஆ.ப, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
No comments