• Breaking News

    நெல்லை கோர்ட் முன்பு கொலை வழக்கு..... 7 பேர் மீது குண்டர் சட்டம்

     


    நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் தம் மீதான வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி நீதிமன்றம் வந்திருந்தார். 

    நீதிமன்றம் வெளியே உள்ள டீக்கடை ஒன்றில் நண்பர் ஒருவருடன் டீ குடித்துக் கொண்டு இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட துரத்தி அரிவாளால் வெட்டிச் சாய்த்தது.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனங்களை முன் வைத்தது. கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ராஜாமணி என்பவர் படுகொலைக்கு பழிவாங்க இந்த கொலை அரங்கேறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

    No comments