தஞ்சாவூர்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
பள்ளி வகுப்பறையில் இன்று (நவ.,20) ரமணியை சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன் குமார் குத்திக்கொலை செய்தார்.இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதன் குமாரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால், மதன் கொலை செய்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வகுப்பறையில் கழுத்தில் குத்தி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments