கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து வழக்குகளும் ஐகோர்ட் நீதிபதி டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி அவர்கள் உத்தரவிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் தமிழக போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
0 Comments