மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள்மண்டலங்களுக்கிடையேயான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் ஆண்களுக்கான ஜூடோ விளையாட்டு போட்டி அக்டோபர் 5ந் தேதியன்று திண்டுக்கலில் உள்ள ஜி.டி.என் கலை கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தேனி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் ஜூடோ விளையாட்டு அணி மாணவர்கள் பங்கேற்றனர்.
இப் போட்டியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் ஜூடோ விளையாட்டு மாணவர்கள் என். தீபக், முதலாம் ஆண்டு இளங்கலை வணிக நிர்வாகம் படிக்கும் மாணவன் 66 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். மற்றும் எம். யோகேஷ் முதலாம் ஆண்டு இளங்கலை வணிக நிர்வாகம் படிக்கும் மாணவன் 73 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். இப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி எம். தர்வேஸ் முகைதீன், ஆட்சிமன்றக் குழு தலைவர் ஹாஜி எஸ் . முகமது மீரான், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் . ஹச் . முகமது மீரான், மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் . பா. அக்பர் அலி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments