கும்மிடிப்பூண்டியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டியில் நாளை (திங்கள்) மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, தபால் தெரு, திருவள்ளூவர் நகர், காட்டுக்கொல்லை தெரு, வி.எம்.தெரு, கோட்டக்கரை, முனுசாமிநகர், பூபாலன்நகர், பெரியார் நகர், பிரித்விநகர், சாமிரெட்டி கண்டிகை, பெத்திக்குப்பம், மா.பொ.சி நகர், விவேகானந்தா நகர், தேர்வழி, குருசந்திரா நகர், ஏ.வி.எம். நகர், ரெட்டம்பேடு, குருவியகரம், ஏனாதிமேல்பாக்கம், அப்பாவரம், நத்தம், கம்மார்பாளையம், தம்பு ரெட்டிபாளையம் மற்றும் சிததராஜகண்டிகை ஆகிய பகுதிகளில் மின் சப்ளை இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி செய்தியாளர் எம்.சுந்தர்
No comments