• Breaking News

    பொன்னேரியில் அதிமுக நகர கழக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்..... முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், அப்துல் ரஹீம் பங்கேற்பு......


    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக பொன்னேரி நகர கழகம் சார்பில் பொன்னேரி தனியார் மண்டபத்தில்.செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்தார், அவர் பேசியதாவது.கழக நிர்வாகிகள் வரும் 8. தேதி நடைபெறும் மனித சங்கிலி  போராட்டத்தில்.கழக நிர்வாகிகள் கிளைக் கழக  செயலாளர்கள் திரளாககலந்து கொள்ள வேண்டும்  26.ம் ஆண்டு வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று நினைவு வைத்துக்கொண்டு பாடுபட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார். 

    இதில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா..மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை  செயலாளர் பி.டி.பானு பிரசாத்,மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார்,நகர செயலாளர் பட்டாபிராமன்,செல்வகுமார்,உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருப்பாளராக நியமனம் செய்துள்ள சி. பொன்னையன் கழக சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் முன்னாள்அமைச்சர். எஸ் அப்துல் ரஹீம் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடம்  மத்தியில் சிறப்பு உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் உபிதுல்லா மாவட்ட துணை செயலாளரும் கவுன்சிலர்மான சுமித்ரா குமார் மீனவரணி மாவட்ட செயலாளர் மாங்கோடு மோகன். மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் வினோத்.விவசாய அணி ஆறுமுகம். பொன்னேரி நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் தேவம்பேடு உதயகுமார். மற்றும் பொன்னேரி நகர நிர்வாகிகள்.மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments