• Breaking News

    நாகை: கீழ்வேளூரில் பாரம்பரிய உணவு திருவிழா


    கீழ்வேளூர் வட்டார மேலாண்மை அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் பயிற்சிகள் முனைவர் ஸ்ரீரங்கபாணி முன்னிலை வகித்தார்.வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.உணவு திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவின் தயார் செய்திருந்த 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    குறிப்பாக பாரம்பரிய அரிசி வகைகள் செய்யப்பட்ட உணவு வகைகள் சிறுதானியங்கள் செய்யப்பட்ட தோசை மட்டும் இட்லி வகைகள் தூதுவளை பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

    இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குருமணாங்குடி சாமந்தி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முதல் பரிசாக ரூபாய் 1500 / இரண்டாம் பரிசாக 75 அனக்குடி ஸ்ரீ மாரியம்மன் குழுவிற்கு ரூபாய் 1000/-மூன்றாம் பரிசாக அத்திப்புலியூர் அன்னி பெசண்ட் குழுவிற்கு ரூபாய் 500/-வழங்கப்பட்டது.கலந்துகொண்ட 30 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் வாங்கப்பட்டது.இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments