கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர் ஊராட்சி காமாட்சிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர் ஊராட்சி காமாட்சி புரம் கிராமத்தில் புதியதாக ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில்.புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.தொடர்ந்த சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.
இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகி ஊர் இளைஞர்கள். கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments