கும்மிடிப்பூண்டி: ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட திருத்தலத்தில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த எட்டாம் தேதி பந்தத்தால் நடைபெற்று தொடர்ந்து கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் கோ பூஜையுடன் தொடங்கி முதல் காலையாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் காலையாக பூஜை நான்காம் காலையாக பூஜை உள்ளிட்ட நடைபெற்று மகாபூர்ணத்தி முடிவடைந்து பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.
அப்போது கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர் பின்னர் புனித நீர் பந்தங்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் குடும்பத்தினர் மற்றும் ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்த் குமார் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ். சிவக்குமார் கவுன்சிலர் ஜோதி. ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கல்விச்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடு கிராம மக்கள் செய்திருந்தனர்.
No comments