ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்....... எச்.ராஜா வரவேற்பு
சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன் ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு அவரை சந்தித்து பேசினேன் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தபோது அவர் சான்றிதழ் அளித்த ஒரு ஊழல் குற்றவாளி தான் செந்தில் பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்று விட்டார்.ஆறு ஆண்டு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஒன்றிய, நகராட்சி அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உறுப்பினர் காலத்தை புதுப்பிக்க உள்ளார்.
அன்றாட மக்களை பாதிக்க உள்ளாக்கும் விஷயங்களை எடுத்துக் கொண்டு தேவை ஏற்பட்டால் போராட்டம் நடத்துவது மக்களிடம் எடுத்து செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவோம். ரயில்வே பட்ஜெட்டில் 6000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிரந்தர முதலீட்டுக்கு எவ்வளவு தொகையை ஒதுக்கி உள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதுபோன்று எதுவும் செய்யாமல் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்க உள்ளனர். இதற்கு தமிழக நிதி அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததை விட தற்பொழுது அதிக திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.நான் பாஜகவில் கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து ராஜா பதவியில் இல்லை என நினைத்தார்கள் 35 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கிறேன்.
இன்றைய கட்சியை வழிநடத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறேன். பல அதிமுக அமைச்சர்கள் இவர்கள் அரசியலில் வருவதற்கு முன்பாக கட்சி ஆரம்பித்த கட்சியில் இருந்தவன். பாஜகவை கார்ப்பரேட் நிறுவனம் என விமர்சிக்கும் அதிமுக இன்று நண்பர் எடப்பாடி சேர்மன் அண்ட் எம்டி ஆப் தி அதிமுக அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்?
என்னுடைய குடும்ப விழாவிற்கு அனைத்து அரசியல தலைவர்களும் வருவார்கள் அதனால் அவர்களை அண்ணன் என்று குறிப்பிட்டேன்தமிழக அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
No comments