தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்ட அந்தியூர் எம் எல் ஏ.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் , பெருமுகை ஊராட்சி வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலறை அமைத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜைசெய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூ.நாயக்கன்பாளையம் ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன் ,பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் , முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் முருகேசன் ,ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி- 9965162471 ,6382211592 .
No comments