• Breaking News

    சத்தியமங்கலம்: மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , புதுப்பீர்கடவு , இக்கரைநெகமம் , ராஜன்நகர்  ஊராட்சிகள் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் , சத்தியமங் கலம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

    சத்தி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணியன், சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ. தேவராஜ் , ஊராட்சி மன்ற தலைவர்கள்  சந்திரமணி,  செல்வன் ,  மகேந்திரன் (பொறுப்பு)  முருகன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது . ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா , கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன்,  கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவரும்,  பேரூர்  செயலாளர்  கே. ரவிச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர் ரஞ்சிதா மகேஷ் ,  சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன்,  மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,  சி. ஆர். செல்வராஜ் , ஆறுமுகம் ஒன்றிய ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் குணசேகரன்,  சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன்,  இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் ,  ரஜினி முருகன்,  புதுப்பீர்கடவு பண்ணாரி,  அருண்குமார்,  ராஜன்நகர் செல்வன் , அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள்,  பணியாளர்கள் ,  வார்டு உறுப்பினர்கள் , கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திட்டத்தில் பயன்பெற்றனர்.

    No comments