• Breaking News

    பன்பாக்கம் அருள்மிகு சுந்தரவல்லி சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பன்பாக்கம்  கிராமத்தில் அமைந்துள்ள  அருள்மிகு சுந்தரவல்லி சமேத ஸ்ரீ காரியமாணிக்க பெருமாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது நூறாண்டுகள் பழமையான திருத்தளத்தில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து கோ பூஜை  கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் கோ பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து மகா தீபாரதம் நடைபெற்றது.

     அதனைத் தொடர்ந்து இறுதி நாளான இன்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பட்டாசியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு  சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் ஒன்றிய செயலாளர் கே ,வி, ஆனந்த் குமார் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்  பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments