• Breaking News

    பாஜகவோடு நெருங்கி போக வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது - அமைச்சர் ரகுபதி

     


    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் ” கிருஷ்ணகிரியில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளியும் அவரது தந்தையும் இறந்தது வெவ்வேறு சம்பவம். ஆனால் 2 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்க்கட்சியினர் பலரும் இதற்கு முடிச்சு போட்டு பார்க்கிறார்கள். இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    நாணயம் வெளியீடு என்பது மத்திய அரசால் வெளியிட வேண்டியது. ஆனால் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழாவில் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதனால் பாஜகவோடு நெருங்கி போக வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்பால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா? என பலர் பகல் கனவு கண்டு கொள்கின்றனர். இதனால் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. 2026 சட்டமன்ற தேர்தலில் இருநூறு இடங்களில் வெற்றி பெற போவதாக திமுக இலக்கை நிர்ணயித்துள்ளது”. இதை கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் எனவும் அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

    No comments