• Breaking News

    சிவகிரி பேரூராட்சி புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சிவகிரி பேரூராட்சி வார்டு எண் 5 எல் பி எஸ் தெரு, வார்டு எண் 3 தலையநல்லூர் சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 111.49 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை சிவகிரி பேரூராட்சி தலைவர் திருமதி.பிரதீபா கோபிநாத்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ. பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் திரு.அ.கோபால் திமுக பொதுக்குழு உறுப்பினர் திரு.ப. கதிர்வேல் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    No comments